வேளாண்மை ஏற்றுமதி அல்லது வேளாண் வணிக மேம்பாட்டு திட்டங்களை நிர்வகிப்பதில், ஐந்து முதல் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். தரவு பதிவு அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர், கணினி அறிவியல் இளங்கலை பட்டம் அல்லது கணிணி பயன்பாடுகளில் இளங்கலை பட்டம் பெற்று, இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த இரண்டு பதவிகளுக்கான விண்ணப்பங்கள், வரும் 11ம் தேதி மாலை 3:௦௦ மணிக்குள், 'தமிழக மாநில வேளாண்மை விற்பனை வாரியம், சிப்பெட் சாலை, திரு.வி.க., தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600032' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது ceotansamb@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வி மற்றும் அனுபவத்திற்கான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.