வேலுார்;''காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு, அதிகாரம், பலம் அனைத்தும் இருக்கும்,'' என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.வேலுார் மாவட்டம், ஸ்ரீபுரம் நாராயணி மகாலில், நாராயணி பீடம், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா நடக்கிறது.
பெண் துறவியர் பங்கேற்ற சக்தி மாநாடு நேற்று நடந்தது.இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சாதனைகள் செய்த பெண் துறவிகளுக்கு சான்றிதழ், விருது வழங்கி பேசியதாவது: காவி தான் ஆன்மிகம்; ஆன்மிகம் இல்லாமல் தமிழில்லை. ஆன்மிகத்தை விடுத்து தமிழக கலாசாரம் இல்லை. காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு, அதிகாரம், பலம் அனைத்தும் இருக்கும்.அனைத்து மதங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆண்டாள் கற்றுக் கொடுத்த தமிழ் தான் இன்று அனைவரின் நாவிலும் தவழ்ந்து கொண்டிருக்கிறது.ஆழ்வார்கள் இல்லாமல் தமிழ் இல்லை. ஆன்மிகமும், காவியும் சேர்ந்தது தான் தமிழகம். ஆனால், தமிழகத்திற்கும், காவிக்கும் சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர்.பலம் பொருந்திய காவி துறவி பெண்களை வணங்குகிறேன். கொரோனா காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில், ஒரு கோவில் கூட மூடப்படவில்லை. வழிபாட்டுட்டுன் தான் கொரோனாவை கட்டுப்படுத்தினோம்.இதை, புதுச்சேரி மாடல் என்று கூட சொல்லலாம். அனைத்து மதத்தினரும் இறைவனை வணங்க வேண்டும். ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்கக் கூடாது. சிதம்பரம் நடராஜரை மோசமாக விமர்சிக்க முடியும் என்பது சுதந்திரம் இல்லை. சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதற்காக, சகிக்க முடியாத வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதனால் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுக்க வேண்டும். எனக்கு பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் இருக்கிறார்; மத நல்லிணக்கம் என பேசுகிறார். அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வார்; ரம்ஜானுக்கும் வாழ்த்து சொல்வார். ஆனால், தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார்.அவரை ஆதரித்தாலும் வாழ்த்து சொல்ல மாட்டார். ஏனென்று கேட்டால் இதுவரை பதில் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அனைத்து மாநிலங்களிலும் கவர்னர்கள் தன்னிச்சையாக செயல்படவில்லை. அந்தந்த மாநில அதிகாரத்துக்கு உட்பட்டு சூழ்நிலைக்கு ஏற்ப, அரசியல் சட்டத்தின்படி தான் செயல்படுகின்றனர்.நானும் அவ்வாறு தான் செயல்படுகிறேன். மற்ற மாநில கவர்னர்களும் அப்படித் தான் செயப்படுகின்றனர். கவர்னர்கள் எந்த கட்சியையும் உடைக்கவில்லை. அவர்களாகவே தங்களுக்குள் உடைத்துக் கொண்டு, கவர்னர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.