வேலுார் : வேலுார் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் காதலியை கத்தியால் குத்திய மாணவரை போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், திருவலம் அருகே குப்பத்தா மோட்டூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 20. இவர் வேலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் ஆர்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி வேலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வருகிறார். இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இந்நிலையில், இன்று காலை கல்லுாரிக்கு செல்வதற்காக திருவலம் பஸ் ஸ்டாண்டில் மாணவி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் மாணவியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். திடிரென மாணவியின் கழுத்தில் சதீஷ்குமார் குத்தினார். படுகாயமடைந்த மாணவியை அப்பகுதியிலிருந்தவர்கள் மீட்டு ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.தப்பியோடிய சதீஷ்குமாரை மக்கள் பிடித்து திருவலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மாணவியை வேறு ஒரு கல்லுாரி மாணவர் அடிக்கடி சந்தித்து பேசி வந்தார். மாணவியின் நடத்தையில் சந்தேமகடைந்து கத்தியால் குத்தியது தெரியவந்தது. திருவலம் போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
அப்பா, அம்மா என்ற ஜீவன்களை பற்றிய ஒரு எண்ணமே இல்லாமல், வெறும் உடல் kavarchikkaaga அதனை காதல் என்று சொல்லி கொண்டு திரிந்தால் இப்படிதான் நடக்கும். இவர்களுக்கு அரசு என்ன உதவி செய்து முன்னேற்ற நினைத்தாலும் காதல், டாஸ்மாக் என புத்தி கேட்டு alaibavargalai யாராலும் திருத்த முடியாது. பாவம் கஷ்ட பட்டு இவனை படிக்க அனுப்பிய பெற்றோர் தான்
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.