ராமேஸ்வரம்--நவராத்திரி விழா யொட்டி இன்று (செப்.25) ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்பு கட்டி விழா துவங்க உள்ளது.
ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, பர்வதவர்த்தினி அம்மனுக்கு இன்று இரவு 9:00மணிக்கு காப்புக் கட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து செப்.26 முதல் அக்.4 வரை கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு, அன்னபூரணி, மகாலட்சுமி, சிவதுர்க்கை, சரஸ்வதி, கவுரி சிவபூஜை, சாரதாம்பிகை, கஜலட்சுமி, மகிஷாசூரமர்த்தினி, துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்.விஜயதசமி விழாவான அக்.5ல் கோயிலில் இருந்து மாலை 4 :30 மணிக்கு பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி மகர்நோம்பு திடலில் எழுந்தருளி, அம்பு எய்து மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் மாரியப்பன், ஊழியர்கள் செய்கின்றனர்.