சென்னை:ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், சூலுார்பேட்டை தடத்தில் 16 ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:சூலுார்பேட்டை - தடா தடத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் செல்ல வேண்டிய 16 ரயில்களும் இன்று, காலை 8:25 மணி முதல், இரவு 11:25 மணி வரையில் ரத்து செய்யப்படுகிறது.
சென்ட்ரல் - சூலுார்பேட்டை அதிகாலை 5:20 மணி, சூலுார்பேட்டை - நெல்லுார் காலை 7:50 மணி, நெல்லுார் - சூலுார்பேட்டை காலை 10:15 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப் படுகின்றன.
சூலுார்பேட்டை - சென்ட்ரல் மதியம் 12:35 மணி, சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 7:45 மணி, சூலுார்பேட்டை - நெல்லுார் காலை 10:00 மணி, கூடூர் - சூலுார்பேட்டை மாலை 5:15 மணி, சூலுார்பேட்டை- சென்ட்ரல் மாலை 6:35 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன
* சென்ட்ரல் - சூலுார்பேட்டை மதியம் 1:15 மணி, சூலுார்பேட்டை - நெல்லுார் மாலை 3:50 மணி, நெல்லுார் - சூலுார்பேட்டை மாலை 6:15 மணி, சூலுார்பேட்டை - சென்ட்ரல் இரவு 8:45 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன.
* ஆவடி - சென்ட்ரல் அதிகாலை 4:25 மணி, காலை 6:40 மணி, சென்ட்ரல் - ஆவடி இரவு 9:15, சென்ட்ரல் - ஆவடி இரவு 11:30 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.
ஒரு பகுதி ரத்து
* சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 7:30 மணி, காலை 10:10, மதியம் 2:30, மாலை 6:00 மணி ரயில்கள் கும்மிடிப்பூண்டி வரையில் இயக்கப்படும்.
* சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 8:35, மாலை 3:30, இரவு 7:05 மணி ரயில்கள் எலாவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
* சென்னை கடற்கரை - சூலுார்பேட்டை மதியம் 12:40 மணி ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டும் செல்லும்.
* சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 10:00, மதியம் 1:20, மாலை 3:20, இரவு 8:20 மணி ரயில்கள் கும்மிடிப்பூண்டியில் இருந்து இயக்கப்படும்.'
* சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 11:35, மாலை 6:15, இரவு 7:05 மணி, இரவு 9:40 மணி ரயில்கள் எலாவூரில் இருந்து இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.