விழுப்புரம்:முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கு விசாரணை, அக்., 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, மாஜி சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில், தற்போது சாட்சி விசாரணை நடந்து வருகிறது. த வழக்கு விசாரணையின் போது, மாஜி சிறப்பு டி.ஜி.பி., மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் ஆஜராக வில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்., 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.