மகுடஞ்சாவடி: ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகுடஞ்சாவடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் தமிழ்செல்வன் அறிக்கை: வேளாண், உழவர் நலத்துறை மூலம் நடப்பாண்டில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான கண்டர்குலமாணிக்கம், ஏகாபுரம் கிராம விவசாயிகளுக்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஒருங்கணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதில், ஒரு ஹெக்டேர் சோளம் சாகுபடி செய்திடும் விவசாயிகளுக்கு ஊடுபயிர் சாகுபடி, கறவை மாடு, ஆடுகள், மண்புழு உரத்தொட்டி, தீவனப்புல் வளர்க்க நிதி உதவி என, ெஹக்டேருக்கு, 50 ஆயிரம் ரூபாய் பின்னேற்பு மானியம், இடுபொருட்களாக இணைந்து வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் எண், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் - 2 ஆகியவற்றுடன் மகுடஞ்சாவடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.
இதில் இணைய விரும்பும் விவசாயிகள், ஒரு ெஹக்டேரில் சோளம் சாகுபடி செய்திடல் வேண்டும். அத்துடன் சோள பயிருக்குள் ஊடுபயிர் சாகுபடி செய்ய வேண்டும். விண்ணப்பிப்பவர்கள், ஏற்கெனவே ஆடு, மாடுகள் வைத்திருப்பவராக இருக்கக்கூடாது.
தீவனப்புல் சாகுபடிக்கு, 10 சென்ட் இடம் ஒதுக்க வேண்டும். திட்ட பயனாளிகள், குடும்ப உறுப்பினர்கள், அரசு பணியாளராகவோ, இதற்கு முன் இத்திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகளாகவோ இருக்கக்கூடாது.
ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள், பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விபரங்களுக்கு மகுடஞ்சாவடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.