தாம்பரம்:திருமணம் செய்து கொள்வதாக, 'ஆன்-லைன்' மூலம் அணுகி, பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி, நுாதன முறையில், 36 லட்சம் ரூபாயை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். இவர், பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது.தாம்பரத்தை அடுத்த முடிச்சூரை சேர்ந்த 35 -வயது பெண், திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனியாக வசித்து வருகிறார்.
'ஆன்லைன்'
இதனால், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, வரன் பார்க்கும் 'ஆன்லைன்' தளத்தில் பதிவு செய்தார்.இவரது விபரங்களை பார்த்து, ஜூன் மாதம் ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டார். தனது பெயர், ஹபீப் ரஹ்மான், 38, என்றும், திருமணம் ஆகி மனைவி இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
சென்னையில் வேலை செய்து கொண்டு, தனியாக வசித்து வருவதாகவும் கூறிய அவர், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதை நம்பி, அப்பெண், திருமணத்தை பற்றி பேச நேரில் வருமாறு அழைத்துள்ளார். ஹபீப் ரஹ்மான், விலையுயர்ந்த சொகுசு காரில் வந்துள்ளார். அப்போது, தன் சகோதரர் கனடாவிலும், சகோதரி புரூனேயிலும் வசித்து வருவதாக கூறியுள்ளார். ஹபீப் ரஹ்மானின், நடவடிக்கைகளை பார்த்து, திருமணம் செய்துகொள்ள அப்பெண் முடிவு செய்துள்ளார்.
தன் சகோதரி ஜூலை மாதம் சென்னை திரும்பிய பின், திருமணம் வைத்துக் கொள்ளலாம் என, ஹபீப் ரஹ்மான் கூறியுள்ளார். தாம்பரத்தை அடுத்துள்ள கிஷ்கிந்தா அருகே, தனக்கு ஏக்கர் கணக்கில் நிலம் இருப்பதாகவும், அந்த நிலம் தொடர்பான வழக்கை முடிக்க, 10 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறிய ஹபீப் ரஹ்மான், நிலம் கைக்கு வந்தவுடன் விற்பனை செய்து, செட்டில் ஆகிவிடலாம் என கூறியுள்ளார்.இதை நம்பி, அந்த பெண்ணும் 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இதேபோல், சிறுக சிறுக, 30 நாட்களில் 36 லட்சம் ரூபாய், 13 சவரன் நகைகளை ஏமாற்றி வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.
ஆசைவார்த்தை