மதுரை: தீபாவளி பண்டிகை கால கூட்டநெரிசலை தவிர்க்க பெங்களூரு யஷ்வந்த்பூர் - திருநெல்வேலி, மைசூர் - துாத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
யஷ்வந்த்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06565) அக்., 18, 25ல் யஷ்வந்த்பூரில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4:30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து ரயில் (06566) அக்., 19, 26 காலை 10:40 மணிக்கு புறப்பட்டு இரவு 11:30 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்று சேரும்.இந்த ரயில்கள் பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மைசூர் -- துாத்துக்குடி
மைசூர் -துாத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் (06253) அக்., 21 ல் மைசூரில் இருந்து மதியம் 12:05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5:00 மணிக்கு துாத்துக்குடி வந்து சேரும். மறு மார்க்கத்தில் துாத்துக்குடியில் (06254) அக்., 22ல் மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:30 மணிக்கு மைசூர் சென்று சேரும். இந்த ரயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.