அரசின் கடும் எச்சரிக்கையை மீறி அமைச்சக ஊழியர்கள் விடுப்பு எடுத்து தர்ணா
Added : நவ 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News



புதுச்சேரி-அரசின் எச்சரிக்கையை மீறி, அமைச்சக ஊழியர்களின் கூட்டுப்போராட்டக் குழுவினர் நேற்று ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சக உதவியாளர் பணியை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதை கைவிடவேண்டும். 100 சதவீதம் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைச்சக ஊழியர்களின் கூட்டுப்போராட்டக்குழு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக ஒரு நாள் விடுப்பு எடுத்து தர்ணா நடத்தப்படும் என அறிவித்தனர்.

ஒட்டுமொத்த விடுப்பு எடுத்தால் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பு செயலர் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தார்.

ஆனால், அமைச்சக ஊழியர்களின் கூட்டுப்போராட்டக் குழுவினர் அரசின் உத்தரவை மீறி, ஏற்கனவே அறிவித்தபடி நேற்று ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டசபை அருகே, ஜென்மராகினி ஆலயம் எதிரில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு சேஷாசலம் தலைமை தாங்கினார். முருகவேல் வரவேற்றார். பரசுராமன், பிரபாகரன் முன்னிலை வகித்தனர். செல்வம், பிரின்ஸ் அருள்தாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

செந்தில்குமார், சிவக்குமார், மணிகண்டன், சக்கரவர்த்தி, ராமமூர்த்தி, இளமுருகன் மற்றும் அன்பரசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆனந்தரசன், கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினர்.

விஜயக்குமார் நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X