திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில் நாளை (நவ.25) காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, விவசாய கடன் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம். முகக்கவசம், தனிநபர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.