ஒயர்லெஸ் சேவையை நவீனமாக்க நடவடிக்கை: கிராமப்புற போலீசார் நிம்மதி
Added : நவ 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News

புதுச்சேரி போலீஸ் துறையில், தகவல் பரிமாற்றம் அனைத்தும் ஒயர்லெஸ் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக, போலீஸ் ஸ்டேஷன்களிலும், போலீஸ் ரோந்து வாகனங்களில் 'ஸ்டேட்டிக்' எனப்படும் ஒயர்லெஸ் கருவிகள் பொருத்தப்படுகின்றன.

இதுமட்டுமின்றி அனலாக் தொழில்நுட்பத்துடன் கூடிய வாக்கி டாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த வாக்கி டாக்கிகளை ரோந்து செல்லும், சப் இன்ஸ்பெக்டர்கள், பீட் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். இவை, நகர பகுதியில் அவசரத்திற்கு கைகொடுத்தாலும், கிராமங்களில் சரிவர சிக்னல் கிடைப்பதில்லை என போலீசார் புகார் தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, புதுச்சேரி போலீஸ் துறையின் ஒயர்லெஸ் சேவையை அனலாக் தொழில்நுட்பத்தில் இருந்து டிஜிட்டல் மயமாக்க போலீஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.இத்திட்டத்திற்கு ரூ.6.44 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தொகை கேட்டு, உள்துறை வாயிலாக மத்திய உள்துறைக்கு விரைவில் கோப்பு அனுப்பப்பட உள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2017 ம் ஆண்டே அவசர உதவி ஆதரவு மையம் அமைக்கப்பட்டது.

இதற்காக மத்திய உள்துறை 3 கோடியே 23 லட்சத்து 41 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.

அதில் ரூ.2 கோடியே 70 லட்சத்து 82 ஆயிரத்து 35 ரூபாய் அவசர கால உதவி மைய திட்டத்திற்கு செயல்படுத்தப்பட்டது.

மீதி 52 லட்சத்து 58 ஆயிரத்து 965 ரூபாய் இருந்ததால் முழுவதுமாக செயல்படுத்தப்படவில்லை. ஒயர்லெஸ் சேவையும் டிஜிட்டல் மையமாக்கப்படவில்லை.

இதனையடுத்து அவசரகால உதவி மைய திட்டத்தின் கீழ் மீண்டும் ரூ.6.44 கோடி தேவை என மதிப்பிட்டு போலீஸ் தலைமையகம், உள்துறைக்கு கோப்பு அனுப்பியுள்ளது.



அவசர எண்-112




ஆபத்து காலங்களில் போலீஸ் உதவியை நாட 100 என்ற தொலைபேசி எண்ணும், தீயணைப்பு துறைக்குக்கு-101, ஆம்புலன்ஸ்-108, பெண்கள் உதவி-1090 ஆகிய உதவிகள் உள்ளன.

இந்த உதவி எண்களை தொடர்பு கொள்ளாமல் 112 என்ற ஒற்றை எண்ணின் மூலம் அனைத்து உதவிகளையும் நொடியில் பெற முடியும்.

ஒயர்லெஸ் சேவையை டிஜிட்டல் மயமாக்கும்போது, ரோந்தில் இருக்கும் வாகனங்களுக்கு விரைவாகவும், துல்லியமாகவும் தகவல் பரிமாற்றம் இருக்கும்.

மேலும், வாக்கி டாக்கிகள் சிறப்பாக செயல்பட ரீப்பிட்டர்கள் அதிக எண்ணிக்கையில் தேவை.

எனவே ரீப்பிட்டர்கள் கூடுதல்இடங்களில் வைக்கவும், ரூ.4.30 கோடி செலவில் நவீன வாக்கி டாக்கிகள் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X