சீரணி அரங்கை அகற்றி விட்டு பேரூராட்சி அலுவலக கட்டடம்
Added : நவ 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 


சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் சீரணி அரங்கை இடித்து விட்டு பேரூராட்சி கட்டடம் கட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இடம் தேர்வு நடக்கிறது.

சீரணி அரங்கை இடித்துவிட்டு அந்த இடத்தில் கட்டடம் கட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு கருத்து கேட்க அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஜான்முகமது,துணைத் தலைவர் செந்தில் முன்னிலை வகித்தனர்.

அம்பலமுத்து பேசியதாவது:

அலுவலகம் கட்ட நகரில் தகுதியான இடம் கிடைக்காத நிலையில் சீரணி அரங்கை இடித்துவிட்டு கூடுதலாக 15 அடி மட்டும் சேர்த்து கட்டடம் கட்ட தீர்மானித்துஉள்ளோம்.

மீதமுள்ள காலியிடத்தில் சீரணி அரங்கம்கட்டப்பட்டு பயன்பாட்டில் தொடரும். இதனால் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளுக்கு பாதிப்பு வராது, என்றார்

கூட்டத்தில் பங்கேற்ற பலர் பேரூராட்சி அலுவலகம் தவிர்த்து வேறு வணிக நோக்கத்திற்கு அந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு தலைவர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

கூட்டத்தில் தி.மு.க., நகர செயலாளர் கதிர்வேல், அ.தி.மு.க., (இ.பி.எஸ்.,) நகர செயலாளர் வாசு, துணைச் செயலாளர் குணசேகரன், பா.ஜ., மாவட்டத்துணைத் தலைவர் கன்னையா, ஒன்றிய தலைவர் இளையராஜா, காங்., நகர தலைவர் தாயுமானவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X