சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு விடுப்பு போராட்டத்தில் பங்கேற்றதால் ஒன்றிய அலுவலக பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 11 அம்ச கோரிக்கைகளான பதவி உயர்வு வழங்குதல், ஊராட்சி செயலருக்கு காலமுறை ஊதியம் கருவூலகம் மூலம் வழங்குதல், பணி நெருக்கடியை கைவிடக்கோருதல், இரவு நேர ஆய்வுக்கூட்டங்களை கைவிடுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு விடுப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.
சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில், திருப்புவனம், காரைக்குடி, திருப்புத்துார் சிங்கம்புணரி, எஸ்.புதுார் உட்பட அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறு விடுப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஒன்றிய அலுவலகங்கள்வெறிச்சோடி காணப்பட்டன. வழக்கமான பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.