சில வரிகள் செய்திகள்:
Added : நவ 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



9 மாதத்துக்கு பின் நாளை ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்



பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்த ஜெகநாதன் ஒன்றிய குழு தலைவராக உள்ளார். அவர் மீது, தி.மு.க., கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதையடுத்து, 9 மாதங்களாக, கூட்டம் நடக்காததோடு, பல்வேறு திட்டப்பணிகள் முடங்கின. கடந்த, 3ல் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அரசு ரத்து செய்தது.

இதனால் தலைவர் ஜெகநாதன், நாளை கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து கவுன்சிலர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தி.மு.க., அணியில், 10 கவுன்சிலர் உள்ள நிலையில், அ.தி.மு.க.,வில் தலைவர் உள்பட, 3 கவுன்சிலர் மட்டும் உள்ளதால், கூட்டத்தில் கடும் விவாதம் நடக்க வாய்ப்புள்ளது.



வரதட்சணை புகார் 4 பேர் மீது வழக்கு



ஆத்துார்:கெங்கவல்லி அருகே கூடமலை, ஒத்தாலக்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி, 33. தம்மம்பட்டி, ஜங்கமசமுத்திரத்தை சேர்ந்தவர் கலையரசி, 29. இவர்களுக்கு, 4 ஆண்டுக்கு முன் திருமணமானது. அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறால் கலையரசி, பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். கடந்த ஜூலை, 9ல், கணவர் வீட்டுக்கு கலையரசி சென்றபோது, வரதட்சணை கேட்டு தாக்கியுள்ளனர்.

பழனிசாமிக்கு வேறு திருமணம் செய்ய, அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதையறிந்த கலையரசி மனமுடைந்து, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை, பெற்றோர் மீட்டு, ஆத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர் புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார், பழனிசாமி, 33, அவரது தந்தை எட்டியண்ணன், 65, தாய் கவுரி, 57, உறவினர் முத்து, 56, ஆகியோர், வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X