தி.மலை:திருவண்ணாமலை அருகே, மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த கீழ்பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சம்பத், 54; இவர், தன் நிலத்தில் நெல் பயிர் செய்துள்ளார்.
வயலில் அதிக எலித்தொல்லையால், வயலை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வயல் ஓரத்தில் சம்பத் நடந்து சென்ற போது, தடுமாறி மின்வேலியில் சிக்கி, மயங்கி விழுந்தார்.
அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள், அவரை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர். வயலில் மயங்கி கிடந்தவரை மீட்டு, திருவண்ணாமலை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.