மணல் லாரி மோதி இருவர் பலி | தூத்துக்குடி செய்திகள் | Dinamalar
மணல் லாரி மோதி இருவர் பலி
Added : நவ 26, 2022 | |
Advertisement
 

தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மணல் லாரி டூவீலர் மீது மோதியதில் இருவர் பலியாயினர்.

விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் புதுப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன் 58. பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

நேற்று மாலை 5:00 மணியளவில் அங்குள்ள பள்ளியில் பயிலும் பேரனை அழைத்து வர டூவீலரில் சென்றார்.

அவருடன் அதே பகுதியை சேர்ந்த அருமைநாயகமும் 70, டூவீலரில் உடன் சென்றார். சாத்தூர் - நாகலாபுரம் சாலையில் சென்ற போது வேகமாக வந்த மணல் லாரி டூவீலர் மீது மோதியது.

இருவரும் சம்பவயிடத்தில் இறந்தனர். சங்கரலிங்கபுரம் போலீசார் மணல் லாரியை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X