மதுரை : தமிழகத்தில் 2018க்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு டி.டி.சி.பி., எனும் நகர் ஊரமைப்பு இயக்கக அங்கீகாரத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்' என தனியார் பள்ளி கூட்டமைப்பான 'பெப்சா'வின் மாநில தலைவர் ஆறுமுகம் வலியுறுத்தினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரம் புதுக்கப்படாமல் இயங்குகின்றன; இது, மிக ஆபத்தானது. பள்ளி வாகனங்களுக்கு எப்.சி., உரிமம் பெற பள்ளி அங்கீகாரம் கட்டாயம்.
அங்கீகார பிரச்னைக்கு 2018ல் அனைத்து பள்ளிகளுக்கும் டி.டி.சி.பி., அங்கீகாரம் வேண்டும் என்ற கல்வித்துறை பிறப்பித்த உத்தரவே காரணம்.
இதன்படி ஒவ்வொரு பள்ளி கட்டடங்களை சுற்றியும் 20 அடி காலியிடம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது தான், தனியார் பள்ளிகளுக்கு தீராத தலை வலியாக உள்ளது.
உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு முன் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்பது எப்படி சாத்தியமாகும்?
'கடந்த 2011க்கு முன் கட்டப்பட்ட திட்டமில்லா பகுதி பள்ளிகளுக்கு டி.டி.சி.பி., அங்கீகாரம் இல்லாமல் புதுப்பிக்கலாம்' என, சென்னை உயர்நீதிமன்றம் அக்., 28ல் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பள்ளிகளுக்கு வழக்கமான மூன்று ஆண்டு புதுப்பித்தல் அங்கீகாரம் வழங்க கல்வித்துறை உடன் உத்தரவிட வேண்டும்.
பள்ளிக் கல்வியும், வீட்டுவசதி மற்றும் நகரமைப்பு துறையும் இணைந்து ஆலோசித்து இவ்விஷயத்தில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே 2018க்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு தளர்வுடன் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.