கடலுார், ஆலப்பாக்கம் அடுத்த புதுச்சத்திரத்தில் இருந்து சென்னைக்கு நேற்று சரக்கு ரயில் புறப்பட்டது. கடலுார் துறைமுகம் ரயில் நிலையம் அருகில் ரயில் வந்த போது, கம்மியம்பேட்டை ரயில்வே கேட்டை மதியம் 2:40 மணிக்கு மூடும் பணியில் ஊழியர் பாரதி ஈடுபட்டார்.
அப்போது, அவ்வழியே கூத்தப்பாக்கம் சுப்ரமணி, 57; என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் ரயில்வே கேட் மூடுவதற்குள் தண்டவாளத்தை கடக்க முயன்றது.
ஆனால் ரயில்வே கேட் பைப்பில் சரக்கு வாகனத்தின் மேல் பகுதி சிக்கியது.
இதனால் பைப் சேதமானது. சிக்னல் கிடைக்காமல் சரக்கு ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலும், மும்பை-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரயில்வே கேட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சீரமைப்பு பணி தாமதம் ஏற்பட்டது. இதனால் 20 நிமிடத்திற்கு பின் ரயில்கள் சைகை மூலமாக அனுப்பப்பட்டது.
கம்மியம்பேட்டை ரயில்வே கேட்டை ரயில்கள் கடந்து சென்ற போது, கேட் சேதமடைந்த பகுதி வழியாக பொதுமக்கள் கடக்காதவாறு ஊழியர்கள் பாதுகாப்பாக நின்றனர்.
கேட் இரவு 7:00 மணிக்கு சரி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து கடலுார் துறைமுகம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து சுப்ரமணியை கைது செய்து, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.