சிதம்பரம்: சிதம்பரம் அருகே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இதில் சிதம்பரம் - சீர்காழி பைபாஸ் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பல பகுதிகளில் இணைப்பு சாலைகள் பிரச்னை அதிகரித்துள்ளது.சிதம்பரம் அடுத்த பொய்யாப்பிள்ளை சாவடியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த அம்மன் கோவில் தெரு மக்கள் 100க்கும் மேற்பட்டோர், தங்கள் ஊரில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் பைபாைஸ கடந்து செல்லும்போது விபத்துக்கள் ஏற்படும். எனவே, பைாைஸ கடந்து செல்ல சுரங்கப் பாதை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 10:00 மணியளவில் பொய்யாப்பிள்ளை சாவடியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாமலை நகர் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகாய் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, விரைவில் தீர்வு காணப்படும் என, உறுதியளித்தனர்.அதனை ஏற்று 11:00 மணியளவில் பொது மக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் சிதம்பரம் - சீர்காழி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இரு புறமும் 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பரபரப்பு நிலவியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மேலும் புதுச்சேரி கோட்டம் செய்திகள் :
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
Learn more
I agree
X