மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க அழைப்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க அழைப்பு
Added : நவ 29, 2022 | |
Advertisement
 

விருத்தாசலம்: மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள மின்வாாரிய செயற்பொறியாளர் சுகன்யா பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட மின்வாரிய அலுவலகங்களில், வரும் 28.11.2022 முதல் 31.12.2022 வரை மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு ஆதார் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மின் இணைப்பு உரிமையாளர்கள், குடியிருக்கும் வாடகைதாரர்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்யப்படாத உரிமையாளர்கள், ஆதார் அட்டை எண்ணை அந்தந்த மின் கட்டணம் செலுத்தும் பிரிவு அலுவலகத்திலும், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட மின் நுகர்வோர்கள் பூதாமூர் துணை மின் நிலையத்தில் செயல்பட்டு வரும் அர்பன் மற்றும் கண்டியங்குப்பம் பிரிவு அலுவலகத்திலும் காண்பித்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளளாம்.அல்லது ஆன்லைன் மூலம் www.nsc.tnebltd.gov.in/adharupload என்ற இணையதளம் வழியாகவும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக்கொள்ளலாம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X