திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கோபுரத்தில், 'சிசிடிவி' கேமரா பொருத்துவதற்காக சேதப்படுத்தப்பட்ட சிற்பம், உடனடியாக சீரமைக்கப்பட்டது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஒன்பது கோபுரங்கள் உள்ளன.
எதிர்ப்பு
இதில், தெற்கு பகுதியில் அமைந்துள்ள, 217 அடி உயர திருமஞ்சன கோபுரத்திற்கு அருகில், ஐந்து நிலைகளுடன், 70 அடி உயரத்தில் கட்டை கோபுரம் அமைந்து உள்ளது.
கார்த்திகை தீப திருவிழாவிற்கு அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வருவர் என்பதால், பக்தர்களை கண்காணிக்க, அந்த கோபுரத்தில் உள்ள சிற்பத்தை சேதப்படுத்தி, கோவில் நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
இதற்கு, பக்தர்கள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, அது குறித்த வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பினர்.
சர்ச்சை
இதையடுத்து, சிற்பத்தின் மீது அமைக்கப்பட்ட கேமராவை, மாற்றி அமைத்தனர்.
இந்நிலையில், சிற்பம் சேதமாக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்ததால், கோவில் நிர்வாகத்தினர், இரவோடு இரவாக, அந்த சிற்பத்தை ஸ்தபதிகளை கொண்டு சீரமைத்து உள்ளனர்.