கரூர், நவ. 30-
சத்துணவு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் கரூர் நகரத்தார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை வகித்தார். இதில், தேர்தல் வாக்குறுதிப்படி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பள்ளிகளில் காலை உணவு திட்ட பணியை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 62 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் சந்திரசேகரன், மாநில பொதுச் செயலாளர் நுார்ஜகான், மாநில துணைத் தலைவர் குப்புசாமி உட்பட
பலர் பங்கேற்றனர்.