காலி பணியிடங்களை நிரப்ப கோரி சத்துணவு ஊழியர் சங்கம் தீர்மானம் | கரூர் செய்திகள் | Dinamalar
காலி பணியிடங்களை நிரப்ப கோரி சத்துணவு ஊழியர் சங்கம் தீர்மானம்
Added : நவ 30, 2022 | |
Advertisement
 


கரூர், நவ. 30-
சத்துணவு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் கரூர் நகரத்தார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை வகித்தார். இதில், தேர்தல் வாக்குறுதிப்படி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பள்ளிகளில் காலை உணவு திட்ட பணியை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 62 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் சந்திரசேகரன், மாநில பொதுச் செயலாளர் நுார்ஜகான், மாநில துணைத் தலைவர் குப்புசாமி உட்பட
பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X