கள்ளக்குறிச்சி : எலவனாசூர்கோட்டை அருகே சொத்து எழுதித் தராத கணவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த எறையூர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மரியசூசை மகன் அந்தோணிசாமி, 26; இவர், சென்னை, செம்மஞ்சேரிகுப்பத்தைச் சேர்ந்த ராஜனி, 23; என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சென்னையில் இருந்தவரை அவரது மாமியார் வீட்டில் தங்கியிருந்த அந்தோணிசாமி, சில மாதங்களுக்கு முன் சொந்த ஊரான எறையூர்பாளையத்திற்கு மனைவியுடன் வந்து குடும்பம் நடத்தினார்.
இந்நிலையில், கிராமத்தில் உள்ள இடத்தினை ராஜனி தனது பெயருக்கு எழுதித் தரும்படி கேட்டுள்ளார்.
அந்தோணிசாமி அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால், கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் 7ம் தேதி ராஜனி, தனது உறவினர் சிவசங்கர் மனைவி தேவியுடன் சேர்ந்து கணவர் அந்தோணிசாமிக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தார்.
இதில், மயங்கி விழுந்த அவர் சேலம் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று குணமாகி வந்தார். அந்தோணிசாமி நேற்று முன்தினம் எலவனாசூர்கோட்டை போலீசில் புகாரின் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.