திண்டிவனம், : திண்டிவனம் அருகே, இரண்டு அரசு பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் கீழ்சேவூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள், திண்டிவனத்தில் உள்ள கல்லுாரி, பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
திண்டிவனத்தில் இருந்து கீழ்சேவூர் கிராமத்திற்குச் செல்லும் அரசு பஸ்கள், சில நாட்களாக சரியான நேரத்திற்கு இயக்கப்படாததால் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 9:30 மணியளவில் ஆவணிப்பூரில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த அரசு பஸ்சையும்; திண்டிவனத்தில் இருந்து ஆவணிப்பூர் சென்ற அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர்.
தங்கள் பகுதிக்கு பஸ்கள் வராததால் மாணவ, மாணவியர்கள் இரவு 8:00 மணிக்கு வீட்டிற்கு வரும் சூழல் உள்ளதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திண்டிவனம் போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர் அதில், உரிய நேரத்தில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, 10:15 மணியளவில் பொதுமக்கள் பஸ்களை விடுவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.