விமர்சனம் எழுதினால் கோடிகள் கொட்டும்: ஐ.டி., ஊழியரை ஏமாற்றி ரூ.33 லட்சம் மோசடி
Updated : டிச 02, 2022 | Added : டிச 02, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

கோவை: வெளிநாட்டு சுற்றுலா மையங்களை பற்றி உயர்வான விமர்சனம் எழுதினால் பணம் கிடைக்கும் என்று நம்ப வைத்து, 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.



latest tamil news



கோவை போத்தனுார் சிட்கோவை சேர்ந்தவர் ரவிசங்கர், 39. தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு டெலிகிராம் செயலியில் ஒரு 'லிங்க்' வந்தது.

இதில், 'சுற்றுலா மையங்களை தர மதிப்பீடு செய்து இணையத்தில் நல்லபடியாக விமர்சன கருத்து பதிவு செய்ய வேண்டும். பயன் அடையக்கூடியவர்கள், பணம் அள்ளிக்கொடுப்பார்கள்; கோடி கோடியாக பணம் கொட்டும்' என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

அதை நம்பிய ரவிசங்கர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களும், அந்த மெசேஜில் இருந்ததை உறுதி செய்தனர். அதன்படி அவரும், சுற்றுலா மையங்களை தர மதிப்பீடு செய்யத் தொடங்கினார். இந்த பணியை தருவதற்கு தங்களுக்கு கமிஷன் தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் கேட்டனர். அவர்கள் கேட்டபடி, பல்வேறு தவணைகளில் ரவிசங்கர், 33 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.

பல சுற்றுலா மையங்களுக்கு தர மதிப்பீடு விமர்சனம் எழுதியும், அவருக்கு பணம் எதுவும் வரவில்லை. விசாரித்தபோது தான், 'மோசடிப் பேர்வழிகளிடம் பணத்தை இழந்து விட்டோம்' என்பது ரவிசங்கருக்கு புரிந்தது.
அவர் உடனடியாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். எஸ்.ஐ., சிவராஜ் பாண்டியன் வழக்கு பதிந்தார். பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட 10 வங்கி கணக்குகள் மற்றும் வெவ்வேறு யு.பி.ஐ., கணக்குகளை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
DVRR - Kolkata,இந்தியா
02-டிச-202218:09:12 IST Report Abuse
DVRR இவன் எல்லாம் ஐ டி படிச்சான் என்று சொல்வதே வேடிக்கையாக இருக்கின்றது. 1) யாரும் வேலை செய்து பணமும் கொடுத்து நிறைய பணம் வரும் என்று எதிர்பார்க்கவே மாட்டார்கள். 2) எவ்வளவோ பெரிய ஏமாறுபவன் கூட பல தடவைகள் இப்படி பணம் கொடுக்கவே மாட்டான் 4) எவ்வளவு அடிச்ஹசிவனாக இருந்தால் ஐ டி ஓடித்தவன் ஒரு தற்குறி தான் என்று மிக மகிய சரியாக சொல்வது போல இருக்கின்றது இந்த செய்கை
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
02-டிச-202215:43:01 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இந்த அதிமேதாவிக்கு எந்த மடையன் வேலை கொடுத்தான் என தெரியவில்லை.. விட்டால் காசுக்கு அந்த நிறுவனத்தையே காட்டி கொடுப்பான் .. படு பயங்கரமான ஆளா இருக்கியேடா...
Rate this:
Cancel
s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
02-டிச-202214:47:41 IST Report Abuse
s.sivarajan இதுபோல ஏமாறதுக்குன்னே சிலர் திரியிறானுங்க போல இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X