மாணவிக்கு தொந்தரவு வாலிபருக்கு 8 ஆண்டு சிறை சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு | சிவகங்கை செய்திகள் | Dinamalar
மாணவிக்கு தொந்தரவு வாலிபருக்கு 8 ஆண்டு சிறை சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு
Added : டிச 02, 2022 | |
Advertisement
 
Latest district News



சிவகங்கை : சிவகங்கையில் பள்ளி சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலி தொழிலாளி செந்தில்முருகனுக்கு 32, எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



சிவகங்கை மாவட்டம் பொன்னாகுளம் காளமேகம் மகனான செந்தில்முருகன் 2017 பிப்., 16 ல் பத்தாம் வகுப்பு மாணவி பள்ளி சென்ற போது டூவீலரில் சென்று கட்டாயப்படுத்தி தன்னுடன் வருமாறு மிரட்டியுள்ளார்.

பின் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் அவர் மீது வழக்கு பதிந்தார். இவ்வழக்கில் செந்தில்முருகனுக்கு எட்டு ஆண்டுகள் நான்கு மாதம் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை 'போக்சோ' நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X