தி.மலை மகா தீபம் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு | திருவண்ணாமலை செய்திகள் | Dinamalar
தி.மலை மகா தீபம் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு
Added : டிச 03, 2022 | |
Advertisement
 

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று, மலை ஏறுவதற்கான புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, வரும் 6ல், மகா தீபத்தன்று மலை மீது ஏறிச் சென்று, தீப தரிசனம் காண, 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

இவர்களுக்கு, செங்கம் சாலையில் உள்ள கருணாநிதி அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு, புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.

அடையாள அட்டை பெற வரும் போது, தங்கள் போட்டோ மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில், ஏதேனும் ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

அனுமதி சீட்டு பெற்றவர்கள், மேற்கு கோபுரம் அருகே உள்ள வழியில் அன்று மதியம் 2:00 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவர்.

தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும்போது திரும்ப கொண்டு வர வேண்டும்.

கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். மலை மீது வேறு எந்த இடத்திலும் நெய்யை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X