கடல் அட்டை கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
கடல் அட்டை கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
Added : டிச 04, 2022 | |
Advertisement
 
Latest district News

கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் அட்டை உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை தொடர்ந்து கடத்தி விற்பனை செய்த ஜாகீர் உசேன் 52, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பெரியபட்டினத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவர் கடல் அட்டை, கடல் வெள்ளரி உள்ளிட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை விற்பனை செய்வதற்காக வேட்டையாடி வந்தார். இவர் மீது இது போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாளர் பாகன் ஜெகதீஷ் சுதாகர், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜானி டாம் வர்கீஸிடம் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவுப்படி நேற்று ஜாகீர் உசேன் , குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது கடல் அட்டை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X