அவலுார்பேட்டை-அவலுார்பேட்டை அருகே பட்டப் பகலில் வீடு புகுந்து திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அவலுார்பேட்டை அடுத்த கோவில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடி மனைவி இந்திரா, 50; இவர், 1ம் தேதி, காலையில் வீட்டை பூட்டிக்கொண்டு கூலி வேலைக்குச் சென்றிருந்தார்.
மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 4 சவரன் நகை, வெள்ளிக் கொலுசு, 50 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.