சென்னை:சென்னை அடுத்த அம்பத்துாரில், அரசு முத்திரையை போலியாக பயன்படுத்தி ஜாதி, பிறப்பு, இறப்பு, பள்ளி சான்றிதழ், பட்டா உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதாகவும், இதற்காக 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வாங்கப்படுவதாகவும், அம்பத்துார் தாசில்தார் ராஜசேகரிடம், பொதுமக்கள் புகார் கூறினர்.
தாசில்தார் புகாரையடுத்து விசாரித்த அம்பத்துார் போலீசார், ஒரகடம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த வின்சென்ட், 85, சோழம்பேட்டையைச் சேர்ந்த பினு, 41 ஆகியோரை, நேற்று மாலை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 50 போலியான சான்றிதழ்கள், அரசு முத்திரை உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் அம்பத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் வின்சென்ட், ஏற்கனவே 2016ல் போலி ஆவணங்கள் தயாரித்ததாக கைது செய்யப்பட்டவர்.