திருவண்ணாமலை : திருவண்ணாமலை தீப தரிசன 'ஆன்லைன்' டிக்கெட் விற்பனை, இன்று முதல் தொடங்குகிறது.
இதை காண, 500 ரூபாய் கட்டணத்தில், 500 அனுமதி சீட்டுகளும், அன்று மாலை, 6:00 மணிக்கு மஹா தீப தரிசனம் செய்ய, 600 ரூபாய் கட்டணத்தில், 100 அனுமதி சீட்டுகள் மற்றும் 500 ரூபாய் கட்டணத்தில், 1,000 அனுமதி சீட்டு வழங்கப்படவுள்ளன.
இந்த சீட்டுகள், https:/annamalaiyar.hrce.tn.gov.in என்ற கோவில் இணையதளம் வழியாக இன்று காலை, 10:00 மணி முதல் வெளியிடப்பட உள்ளது.
ஆதார் அட்டை, மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரி கண்டிப்பாக தேவை.
ஒரு ஆதார் அட்டைக்கு, ஒரு சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.
பதிவு செய்தவுடன் மொபைல்போனுக்கு ஓ.டி.பி., வரும்.
அதே இ-மெயில் வழியாக கட்டண சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் டிக்கெட் பெற்றவர்களுக்கு, பரணி தீபம் தரிசனத்திற்கு, 6 அதிகாலை, 2:00 மணி முதல், 3:00 மணி வரை; மஹா தீபத்திற்கு, மதியம், 2:30 மணி முதல் முதல், 3:30 வரை மட்டும், கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவர்.
ஆன்லைனில் பெற்ற டிக்கெட், ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் வருவோருக்கு, கண்டிப்பாக அனுமதியில்லை.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.