ஈரோடு:'அரசு அலுவலக வளாகங்களில் கோயில் வழிபாடு கூடாது என்று எதிர்த்தால் கோயில்களை விட்டு அரசும் அறநிலையத்துறையும் வெளியேறட்டும்' என ஹிந்து அமைப்புகள் வலியுறுத்துகின்றன. ஈரோடு மாநகராட்சி தலைமை அலுவலக வளாகத்தில் பழமையான வலம்புரி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சில புனரமைப்பு பணிகள் நடந்து இன்று காலை 8:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி திராவிடர் விடுதலை கழகம் என்ற அமைப்பு சார்பில் 'மாநகராட்சி அலுவலகமான அரசு அலுவலக வளாகத்தில் கோயில் வழிபாடு யாகசாலை பூஜை செய்யக்கூடாது; அதை இடித்து அகற்றுவோம்' என கூறி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் 12 பேர் கூடினர். இதற்கான அறிவிப்பு வந்தது முதல் பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மாநகராட்சி மற்றும் கோயில் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திராவிடர் விடுதலை கழகம் என்ற அந்த அமைப்பினர் கடப்பாரை மண் வெட்டியுடன் வந்து யாகசாலையை அகற்றுவோம் என கோஷம் எழுப்பியதும் கைது செய்யப்பட்டனர். எனினும் அவர்களின் செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பா.ஜ. பிரசார அணி முன்னாள் மாநில தலைவர் சரவணன் கூறியதாவது: மாநகராட்சி வளாக விநாயகர் கோயில் பல ஆண்டுக்கு முன் கட்டியது; கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கூட சீரமைக்கப்பட்டது. இப்போது அந்த கோயிலை எதிர்ப்போம் என்பவர்கள் அப்போது எங்கு போயினர்? தற்போது புனரமைப்பு செய்து கும்பாபிஷேக பூஜை நடக்கும்போது இடிப்பேன் என்பது தவறானது. முதல்வர் ஸ்டாலினின் மோசமான ஆட்சியை பற்றி மக்கள் விமர்சிக்காமல் தடுக்க அவருக்காக 'திராவிடர்' என்ற பெயரிலான அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபடுகின்றன.
அரசின் 12.66 ஏக்கரை சி.எஸ்.ஐ. நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளது என நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்தது. அவ்விடத்துக்கு கடப்பாரை மண் வெட்டியுடன் செல்ல வேண்டியது தானே... ஆனால் அவ்வாறு செல்ல மாட்டார்கள். தி.மு.க.வினர் நேரடியாக எதிர்த்து பேசினால் ஓட்டு பறிபோகும் என்பதால் இதுபோன்ற கட்சிகளை துாண்டி விடுகின்றனர். அதேநேரம் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பல கோயில்களில் யாகம் வளர்த்து பூஜையில் ஈடுபடுகிறார். அவரை கோயிலுக்கு செல்லக்கூடாது என யாரும் வலியுறுத்துவதில்லை. கோயில்களுக்கு வரும் வருவாயையும் கோயில் நிலங்களையும் அரசு பயன்படுத்தும்போது அரசு நிலத்தில் கோயில் அமைவதில் என்ன தவறு உள்ளது?இவ்வாறு கூறினார்.
ஹிந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: கடவுள் இல்லை என கூறுவோர் எல்லா கடவுளையும் எதிர்க்கட்டும். ஹிந்து கடவுளை மட்டும் எதிர்ப்பது தவறானது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடம். அதை இடிக்க வலியுறுத்தட்டும். கோயில் இடம் சொத்து பணத்தை அரசு பயன்படுத்தும்போது அரசு நிலங்களில் கோயில் கட்டுவது தவறில்லை. பல கோயில்களுக்கு வரும் வருமானத்தை அரசு எடுத்து செலவிடுகிறது; அறநிலையத்துறையை நடத்துகிறது. ஹிந்து கோயில்களை மட்டுமே அறநிலையத்துறையின் கீழ் நடத்தும்போது அரசு நிலங்களில் கோயில் கட்டுவது பூஜைகள் செய்வது தவறில்லை. அப்படி கூறினால் அறநிலையத்துறையை அகற்றி கோயில்களை விட்டு அரசு வெளியேறட்டும். கோயில்களை ஆன்மிக இறைவழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்களிடம் ஒப்படைக்கட்டும். கோயில்களை இடிக்க வருவேன் என்பது தங்களுக்கு எதிரான செயல்பாடாகவே அரசு பார்க்க வேண்டும். அரசு அலுவலக வளாகத்தில் கோயிலுக்கான யாகசாலை பூஜை செய்வது தவறு என்றால் அரசு சார்பில் ஹஜ் யாத்திரை ஜெருசலேம் பயணத்துக்கு நிதியுதவி வழங்குவதும் தவறு தானே; அதையும் இவர்கள் எதிர்க்கட்டும். இவ்வாறு கூறினார். திராவிடர் விடுதலை கழகம் என்ற அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்தினசாமி கூறியதாவது: மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கோயில் வழிபாடு செய்வதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அரசு அலுவலக வளாகத்தில் அத்தனை மதத்துக்கும் கோயில்கள் உள்ளதா என பார்க்க வேண்டும். சி.எஸ்.ஐ. நிர்வாகத்தில் உள்ள இடத்தில் சில ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு என நீதிமன்றம் தீர்ப்பு கூறியதை வரவேற்கிறோம்; அதுபோல அரசு வளாகத்தில் கோயில்கள் பூஜைகள் யாக சாலை அமைப்பதையும் எதிர்க்கிறோம். இவ்வாறு கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
முதலில் இந்த ஹிந்து எதிர்ப்பாளர்கள் ஒன்றை முதலில் புரிந்துகொள்ளவேண்டும், ஹிந்துக்களுக்கு எதிராக மட்டுமே குரல் கொடுக்கவும், கடப்பாரை எடுத்துவந்து கோயில்களை இடிக்க இருக்கும் தைரியத்தை நான் பாராட்டுகிறேன், சரி உங்களால் இதே தைரியத்தோடு மாற்றுமத கோயில்களுக்கு முன்பு உங்களால் போக தைரியம் உண்டா? கேவலம் எச்சில் காசுக்கு ஆசை பட்டு ஹிந்துக்களையும், ஹிந்து கடவுள்களையும், கோயில்களையும் எதிற்கும் நாதாரி கூட்டத்தை வன்முறை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
பகுத்தறிவு நிறைந்தவர்கள் இந்து மத கோயில்கள் மற்றும் அதன் நம்பிக்கைகள் மற்றும் அதன் வழிபாடுகள் குறித்து கொஞ்சம் கூட தலையிடவே வேண்டாம் .'தில்' இருந்தால் மற்ற மதங்களின் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் நம்பிக்கைகள் மற்றும் அதன் வழிபாட்டு முறைகளில் தலையிட்டு தங்களின் வீரத்தைக் காட்டட்டும் .மக்களும் இந்த அசாத்திய துணிச்சலை அமோகமாக வரவேற்பார்கள் ,அவர்களைக் கட்டாயம் பாராட்டுவார்கள்.செய்வார்களா ???
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
முதலில் துர்க்கா ஸ்டாலின் அவர்களை கோவிலுக்கு போகக்கூடாது என்று சொல்லட்டும். திராவிடர் கழகமே பிள்ளையார் கோவில் சொத்து, அது தெரியமா உங்களுக்கு? அரசு முதலில் ஹஜ் பயணத்துக்கான உதவித்தொகையை நிறுத்தட்டும். மௌல்விகளுக்கு மாதம் தோறும் தரப்படும் தொகை நிறுத்தப்படட்டும். ஜெருசலேம் செல்ல உதவித்தொகை நிறுத்தப்படட்டும். முஸ்லீம் மற்றும் கிருத்துவ மாதங்களில் இருந்து அரசுக்கு எந்தவித வருமானமும் இல்லை. ஆனால் ஹிந்து அறநிலையத்துறை வருமானத்தை அரசு எடுத்துக்கொள்கிறது. அதை நிறுத்தட்டும் முதலில். ரத்தினசாமி இதை எல்லாம் அரசிடம் சொல்வாரா? கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறாராம், அங்கு கடப்பாரை செல்லாதா?
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.