திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில் நாளை காலை பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
இதை காண, 500 ரூபாயில் 500 அனுமதி சீட்டுகள்; மஹா தீப தரிசனத்திற்கு 600 ரூபாயில் 100 அனுமதி சீட்டுகள்; 500 ரூபாயில் 1,000 அனுமதி சீட்டுகளும் ஆன்லைனில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு விற்பனை தொடங்கியது.
அரை மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. பரணி தீப தரிசனத்துக்கு, 6ம் தேதி அதிகாலை, 2:00 - 3:00 மணி; மஹா தீப தரிசனத்துக்கு பகல், 2:30 - 3:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். விபரங்களுக்கு, 1800 425 3657 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.