ஆன்லைனில் அரை மணியில் தீர்ந்த அண்ணாமலையார் தரிசன டிக்கெட் | திருவண்ணாமலை செய்திகள் | Dinamalar
ஆன்லைனில் அரை மணியில் தீர்ந்த அண்ணாமலையார் தரிசன டிக்கெட்
Added : டிச 05, 2022 | |
Advertisement
 



திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில் நாளை காலை பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

இதை காண, 500 ரூபாயில் 500 அனுமதி சீட்டுகள்; மஹா தீப தரிசனத்திற்கு 600 ரூபாயில் 100 அனுமதி சீட்டுகள்; 500 ரூபாயில் 1,000 அனுமதி சீட்டுகளும் ஆன்லைனில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு விற்பனை தொடங்கியது.

அரை மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. பரணி தீப தரிசனத்துக்கு, 6ம் தேதி அதிகாலை, 2:00 - 3:00 மணி; மஹா தீப தரிசனத்துக்கு பகல், 2:30 - 3:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். விபரங்களுக்கு, 1800 425 3657 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X