இளம் வயது திருமணம்; விபத்தால் இளம்பெண் சாவு
Added : டிச 05, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



ஈரோடு : ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, துாரபாளையம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் பவித்ரா, 17. மொடக்குறிச்சியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.

பவித்ராவை கடத்தி, 2022 ஏப்ரலில் திருமணம் செய்து கொண்டார். தொடக்கத்தில் இருதரப்பு பெற்றோரும் திருமணத்தை ஏற்கவில்லை. பின் சம்மதம் தெரிவிக்கவே, கோபாலகிருஷ்ணன் வீட்டில் தம்பதி வசித்தனர்.

திருமணத்துக்கு முன்பே சிறுமியுடன் கோபாலகிருஷ்ணன் உறவு கொண்டதால், அவர் கர்ப்பமானார். நாடார்மேட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த, 24ல் அறுவை சிகிச்சை மூலம் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது 'ஜன்னி' எனும் தீவிர உடல் நலக்குறைபாடு ஏற்பட்டதால், 25ம் தேதி ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு பவித்ரா அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கும் உடல் நிலை மோசமாகவே, கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.

மேட்டுகடை அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது, திடீரென விபத்தில் சிக்கியது. அப்போது, ஸ்ட்ரெச்சரில் இருந்த பவித்ரா, கீழே விழுந்தார்.

இதில் முகம் மற்றும் உடலில் பொருத்தியிருந்த, உயிர் காக்கும் கருவிகள் கழன்று விழுந்தன. வேறு ஆம்புலன்சில் ஏற்றி, 27ம் தேதி அதிகாலை கே.எம்.சி.எச்.,சில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 2ம் தேதி காலை பவித்ரா இறந்தார்.

இதற்கிடையே சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன், மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். 'போக்சோ' பிரிவில் கோபால கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

ஆம்புலன்சை அஜாக்கிரதையாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு காரணமான, தனியார் மருத்துவமனை டிரைவர் சரத் மீது, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிறுமியின் பிறந்த தேதி, திருமண வயது உள்ளிட்டவற்றை கண்டு கொள்ளாமல், கருவுற்றது முதல் பிரசவம் வரை, தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்தது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X