ஆவின் பணிநியமன முறைகேட்டில் சிக்கியோர் மீது நடவடிக்கை துவக்கம்: 'டிகிரி'யே முடிக்காதவர்கள் பணி நீக்கம்!
Updated : டிச 05, 2022 | Added : டிச 05, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

மதுரை: மதுரை ஆவினில் 2019 - 2020ல் முறைகேடாக பணிநியமனம் செய்யப்பட்டது தொடர்பாக ஒருவரை பணி நீக்கம் செய்யவும், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் குழுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



latest tamil news



மதுரையில் உதவிப் பொது மேலாளர் முதல் உதவியாளர் வரை 61 பணியிடங்களுக்கான நியமனம் நடந்தது. இதில் எழுத்து தேர்வில் குறிப்பிட்டவர்களுக்கு வினாத்தாள்களை லீக் செய்தது, விண்ணப்பத்தில் வங்கி காசோலை மாற்றம், நேர்காணலுக்கு குறிப்பிட்ட நபர்களை அழைத்தது, நியமனம் செய்யப்பட்ட நாளின்படி டிகிரி முடிக்காத ஒருவருக்கு பணி வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை எழுந்தன.

முறைகேடுகள் குறித்து தினமலர் நாளிதழிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இதன் எதிரொலியாக சென்னை ஆவின் அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் உட்பட பல்வேறு அதிகாரிகள் குழு இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்த்தன. இதையடுத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி நேர்காணலின்போது டிகிரியை முழுமையாக முடிக்காத 'எக்ஸிகியூட்டிவ் அலுவலர்' ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அப்போதைய சான்றிதழ் சரிபார்த்த அலுவலக மேலாளர் (நிர்வாகம்) உட்பட 5 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல் அப்போது நேர்காணல் நடத்திய குழுவில் பொது மேலாளர் தலைமையில் துணைப் பதிவாளர், உதவிப் பொது மேலாளர்கள், மேலாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் அதிகாரிகள் தவிர்த்து அலுவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.






ஆவின் ஊழியர்கள் கூறுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை துவங்கியது ஆறுதலாக உள்ளது. நேர்காணல் குழுவில் இடம் பெற்ற ஆவின் அலுவலர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்ற பொது மேலாளர், துணைப் பதிவாளர், உதவி பொது மேலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இனி தவறு செய்பவர்கள் அச்சப்பட வேண்டும்" என்றனர்.



எங்களுக்கு நாங்களே நீதிபதி




இந்த முறைகேட்டில் பொது மேலாளர் உட்பட நிர்வாக பிரிவு மற்றும் தொழிலாளர் உறவு பிரிவை சேர்ந்தவர்கள் தான் அதிகம் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் மதுரை ஆவினில் தற்போது அப்பிரிவுகளில் 2019 - 2020ல் தவறு செய்தவர்களே அதே பணியில் நீடிக்கின்றனர். தவறு செய்தவர்களே அதற்கான தண்டனையை முடிவு செய்யும் நிலை உள்ளது.

அதாவது கமிஷனரின் நடவடிக்கை உத்தரவை கண்துடைப்பாக பின்பற்றி சாதாரண குற்றம் 7 (1) பிரிவில் நோட்டீஸ் அளிக்கப்படுகின்றன. இவர்கள் மீது கடுங்குற்றம் (7(2) பிரிவில் நடவடிக்கை எடுக்காமல் தப்ப வைக்கும் முயற்சி நடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்களை அப்பிரிவில் இருந்து மாற்றம் செய்த பின் நடவடிக்கைகளை பொது மேலாளர் சாந்தி தொடர வேண்டும் என, நேர்மை ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
05-டிச-202214:56:34 IST Report Abuse
பாமரன் ஒருத்தர் பொய் சர்டிபிகேட் வச்சிக்கிட்டு இப்ப ஜி20 தலைன்னு சொல்லிக்கினு கொரங்கு சாதம் (அதாங்கோ மன்கி பாத்) கிண்டிக்கிட்டு இருக்காரு...இங்கே வழக்கம்போல சாமி எறும்பை அடிக்கறாய்ங்க... 😫😫
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
05-டிச-202214:49:25 IST Report Abuse
Narayanan திமுகவின் திட்டம் இதுதான் . அதாவது எல்லா துறைகளிலும் பழையவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை நியமிப்பதாக சொல்கிறார்கள் . அப்படி புதிதாக நியமித்தால் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டுமோ ? மேலும் நிரந்தரம் செய்யமுடியாதாம் . தற்காலிக பணி. அப்போதுதான் அடுத்து புதியவர்களை கொண்டுவர லஞ்சம் வாங்கமுடியும் .
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-டிச-202212:55:10 IST Report Abuse
duruvasar பாலிலேயே டிகிரி இல்லை . ஓரிரு வாரங்களாக பாலில் துர்நாற்றம் வீசுகிறது . முதலில் பாலை ஆய்வு செய்து சரியான டிகிரி தரத்தில் கொடுக்க முயற்சியுங்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X