ஊட்டி:டில்லியில் போர் விமானத்தில் இருந்து பாராசூட் வாயிலாக குதித்து நீலகிரி மாணவி சாகச பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு கலைகல்லுாரியில் கோகிலவாணி, 21, என்ற மாணவி மூன்றாமாண்டு பி.ஏ., சுற்றுலாவியல் படித்து வருகிறார்; தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.,) உள்ளார்.
கடந்த நவ., 1 முதல், 25ம் தேதி வரை டில்லியில் என்.சி.சி., மாணவியர் பிரிவினர் பங்கேற்ற 'பாரா கேம்ப்' நடந்தது.
இதில், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து இரு மாணவர்கள், ஒரு மாணவி பங்கேற்றனர். அதில், மாணவி கோகிலவாணி போர் விமானத்தில் பயணித்து, 2 கி.மீ., உயரத்தில் இருந்து பாராசூட் வாயிலாக குதித்து சாகச பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அவருக்கு, 31வது என்.சி.சி., தனி அணி கமாண்டர் கர்னல் சீனிவாஸ், கல்லுாரி முதல்வர் எபினேசர், கல்லுாரி என்.சி.சி., அலுவலர் விஜய் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
கோகிலவாணி கூறுகையில், ''என்.சி.சி.,யில் சேரும்போது 'பாராசூட்' சாகசத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான வாய்ப்பு கிடைத்த போது சாதித்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளேன்,'' என்றார்.