கள்ளக்குறிச்சி-விவசாய நிலங்களுக்கு செல்லும் பொது வழியை தனி நபர் ஒருவர் ஆக்கிர மிப்பு செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலபழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ஜெயசந்திரன், 40; விவசாயி. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த ஜெயச்சந்திரன் மனுக்கள் பதிவு செய்யும் வளாகத்தில் திடீரென அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றார்.
உடன் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை தடுத்து உடலின் தண்ணீர் ஊற்றினர்.
விசாரணையில் மேலப்பழங்கூர் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பொது வழியை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்தது குறித்து புகார் அளிக்கப் பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
தற்போது மீண்டும் பொது வழியை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் அவ்வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கேட்டால் அடியாட்களை வைத்து தாக்கி, கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என அவர்கள் கூறினார். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தி்ல பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற ஜெயசந்திரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.