பல்லடம் : ''பல்லடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,'' என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், அவசர பணிக்கு செல்பவர்களின் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது.
நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதற்கிடையே, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்தார். பல்லடத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நீண்ட நேரம் காத்திருந்த அர்ஜுன் சம்பத் காரில் இருந்து இறங்கி நடந்து சென்று கடை ஒன்றில் காத்திருந்தார். அரை மணி நேரத்துக்கு பின், நெரிசலை கடந்து கார் வந்ததும் அதில் ஏறி புறப்பட்டார்.
அவர் கூறுகையில், ''தொழில் ரீதியாக வளர்ந்து வரும் பல்லடத்துடன் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகள் இணைகின்றன.
இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண, மேம்பாலம் அமைப்பதுடன் புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டியதும் அவசியம்,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.