ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அபிஷேகத்திற்கு கங்கை தீர்த்தம் சப்ளை இல்லாததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
தீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயிலில் 22 தீர்த்தங்களை நீராடி தரிசிக்க தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலில் பல நூறு ஆண்டுகளாக உத்தரகாண்ட் ஹரித்துவாரில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித கங்கை நீரை சுவாமி சிலைக்கு அபிஷேகம் செய்து பூஜை நடக்கும். மேலும் பக்தர்களுக்கு வில்வ இலையுடன் கோடி தீர்த்தமும் பிரசாதமாக வழங்குவர். இதனை கண்டு பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதி தரிசனம் செய்வார்கள். இதில் கங்கை தீர்த்தத்தை 200 மி.லி., அளவில் பித்தளை கலசத்தில் அடைத்து ரூ.50 க்கு கோயில் நிர்வாகம் விற்றது.
ஆனால் கடந்த ஓராண்டாக ஹரித்துவாரில் இருந்து நன்கொடையாளர் வழங்கிய கங்கை தீர்த்தத்தை பெற கோயில் அதிகாரி கவனம் செலுத்தாமல் கைவிட்டார். இதனால் தற்போது சுவாமிக்கு கங்கை அபிஷேகமும், பக்தருக்கு தீர்த்தம் விற்பதும் இல்லை. இதனால் பக்தர்கள் கங்கை அபிஷேகம் செய்ய முடியாமல், தீர்த்தம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து ராமேஸ்வரம் சேர்ந்த புரோகிதர் ராமு கூறுகையில் : கங்கை தீர்த்தத்தை பெற பல முறை வலியுறுத்தியும் கோயில் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் சுவாமிக்கு கங்கை தீர்த்த அபிஷேகம் இல்லை, பக்தர்களுக்கு சப்ளையும் இல்லை. அதிகாரிகள் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளதால், பாரம்பரிய மரபுகளை காற்றில் பறக்க விடுகின்றனர் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
அது என்ன பேஷ்கார், கெங்கா ? புரியிற மாதிரி அழகு தமிழ்ல எழுதலாமில்லையா ? தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் எழுதினால், வடநாட்டு யாத்திரிகர்களும் பயனடைவார்கள். அலுவலக அறைகளுக்கு எண் கொடுத்திருந்தால், 1ம் எண் அலுவலகம், 2ம் எண் அலுவலகம் என எளிதாக செல்வார்கள். மீனாட்சி அம்மன் அமர்ந்த இடத்தில் அரசுக்கு 100கோடி வருவாய் ஈட்டுகிறார். ராமநாத ஸ்வாமி அதைவிட அதிக வருவாய் அரசுக்கு ஈட்டிக்கொடுப்பார் என நம்புவோம். ஆனால் விடியல் ஆட்சியில், சனாதனத்தை ஒழிப்போம், இந்துக்களை ஒழித்துக்கட்டுவோம், என ஏச்சும் பேச்சும் மட்டுமே என்பது தான் உண்மை....
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.