அரசு வேலை ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டவர் கைது | சென்னை செய்திகள் | Dinamalar
அரசு வேலை ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டவர் கைது
Added : டிச 06, 2022 | |
Advertisement
 
 அரசு வேலை ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டவர் கைது



ஓட்டேரி பெரம்பூர் அடுத்த எம்.கே.பி., நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 57. இவருக்கு, ஓட்டேரி, சச்சிதானந்தம் தெருவை சேர்ந்த எபினேசர், 56, என்பவர் அறிமுகமானார். இவர், மாரிமுத்துவின் உறவினருக்கு, அரசு வேலை வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.

இதை நம்பிய மாரிமுத்து எபினேசர் கேட்ட, 8 லட்சம் ரூபாயை கொடுத்திருக்கிறார். மூன்று ஆண்டாகியும், வேலையோ, கொடுத்த பணமோ திரும்ப கிடைக்கவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த மாரிமுத்து, ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.

விசாரித்த போலீசார், நேற்று காலை எபினேசரை கைது செய்து, அவரது, 'டொயோட்டோ' காரை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் பலரிடம், அரசு வேலை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், வீடுகள் வாங்கி தருவதாக 83 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X