அரசு அலுவலர் பணியிடம் காலி பூந்தமல்லி மக்களுக்கு சிரமம்
Added : டிச 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. உள்ளூர் வாசிகள் மட்டும் இல்லாமல், பல மாவட்டங்களைச் சேர்ந்தோர் இப்பகுதிகளில் தங்கி, நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

பூந்தமல்லி நகராட்சியில் ஐந்து மாதங்களுக்கு மேலாக சுகாதார ஆய்வாளர், நகர அமைப்பு ஆய்வாளர், நகர அமைப்பு சர்வேயர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

குறிப்பாக, நகராட்சிக்கு வருவாய் ஈட்டக்கூடிய நகரமைப்பு பிரிவில் அதிகாரி இல்லாததால், புதிதாக வீடு கட்டுவோர் அனுமதி கேட்டு அளித்த மனு, நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது.

திருவள்ளூரில் இருந்து பொறுப்பில் வந்துள்ள சுகாதார அதிகாரியும் வேலை பளு காரணமாக முறையாக கண்காணிக்க முடிவதில்லை.

இதனால், பல வார்டுகளில் குப்பை குவிந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாங்குவதில் கூட, மக்களுக்கு சிக்கல் இருக்கிறது.

போதிய அதிகாரிகள் இல்லாததாலே, கடந்த மழைக்கு, பூந்தமல்லி பகுதி அதிகம் பாதிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டது.

டிசம்பர் மாத மழைக்கு அதுபோல இல்லாமல், உடனடி மீட்பு பணி, சுகாதார விசயத்தில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கமிஷனரை நீக்க தீர்மானம்

பூந்தமல்லி நகராட்சி கூட்டம், அதன் தலைவர் தி.மு.க.,வைச் சேர்ந்த காஞ்சனா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் நாராயணன், அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 20வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சவுந்தர்ராஜன், ''கமிஷனர் நாராயணன் மற்றும் வருவாய் பிரிவு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்'' என்றார்.மேலும், ''இவர்களால் வளர்ச்சி திட்ட பணிகள் அதிகளவில் தேங்கியுள்ளன. கடந்த மழையின் போதுகூட, தேங்கிய மழை நீரை சரிவர அகற்ற ஒத்துழைப்பு வழங்கவில்லை,'' என்றார்.இவரது தீர்மானத்தை, மற்ற கவுன்சிலர்கள் வரவேற்று, மேஜையை தட்டி, ஆதரவு தெரிவித்தனர். தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றும்படி கூறினர். அப்போது கமிஷனர் நாராயணன், ''பணிகளை முடிக்க, அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதையடுத்து அந்த தீர்மானம், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X