ரூ.30 லட்சம் கடன் வாங்கி மோசடி சேலையூரில் தாய், மகள் கைது
Added : டிச 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News



சென்னை, தாம்பரத்தை அடுத்த சேலையூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரெஜிகுமார், 47; எல்.ஐ.சி., ஏஜன்ட். இவரது கணவர் குமார் 2014ல் உயிரிழந்தார். மகள் ஜூலி, 25; மென்பொறியாளர்.

கடந்தாண்டு, ஜூலியின் திருமண செலவிற்காக, தனக்கு தெரிந்த அதே பகுதியைச் சேர்ந்த கவிதா, மோகன், ஜீவரத்தினம் உள்ளிட்ட பலரிடம், ரெஜிகுமார் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினார்.

ஜூலிக்கு திருமணம் முடிந்த பின், மேற்கண்ட மூவரும் பணத்தை திருப்பி கேட்டனர். அப்போது, அவர்களுக்கு, ரெஜிகுமார் காசோலை கொடுத்துள்ளார்.

அந்த காசோலை போலி என்பது தெரிந்தவுடன், ஆத்திரம் அடைந்த மூன்று பேரும், ரெஜிகுமாரின் புகைப்படத்தை வீட்டின் சுவரில், 'செக் மோசடி கும்பல்' என சுவரொட்டி ஒட்டினர்.

அதிர்ச்சியடைந்த ரெஜிகுமார், தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக, மூன்று பேர் மீதும், தாம்பரம் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, மூன்று பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த கவிதா, மோகன், ஜீவரத்தினம் மற்றும் சிலர், நேற்று மாலை, கிழக்கு தாம்பரம் பகுதியில், மீன் வாங்குவதற்காக வந்த ரெஜிகுமாரை முற்றுகையிட்டு, பணத்தை திருப்பி தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த சேலையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

இதில், ரெஜிகுமார் மற்றும் அவரது மகள் ஜூலி ஆகியோர், திருமணத்திற்காக பலரிடம் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X