கள்ளக்குறிச்ச : கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத்தையொட்டி, கள்ளக்குறிச்சி சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் அதிகாலை பஞ்ச மூர்த்தி தெய்வங்களுக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் கோவில் கோபுரங்களில் மகாதீபம் ஏற்றினர்.
அதேபோல் வீரசோழபுரம் சிவன் கோவில், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், அரியபெருமானுார் ஆத்மஞான லிங்கேஸ்வரர் கோவில், சாமியார்மடம் செம்பொற்ஜோதிநாதர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனுார், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், கணங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர் ஆகிய கோவில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது.