சுய தொழிலுக்கு மானியத்துடன் கடனுதவி
Added : டிச 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சுயதொழிலுக்கு கடனுதவி பெற்று பயன்பெறாலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு;

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழில் துவங்கவும், ஏற்கனவே நடத்தப்படும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்துதலுக்கு கடனுதவி பெறலாம்.

பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், ஊறுகாய் வற்றல், அரிசி ஆலை, உலர் மாவு, உணவு எண்ணெய் பிழிதல், மரச்செக்கு எண்ணெய், பேக்கிரி பொருட்கள், மசாலா பொடிகள் தயாரித்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி மற்றும் மீன் வகைகள் பதப்படுத்துதல் போன்றவற்றிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒரு கோடி ரூபாய் வரையிலான திட்ட தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் உதவி பெறுவதற்கு தகுதி பெற்றவையாகும். திட்ட தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தனது பங்காக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாக் கடனாக வழங்கப்படும்.

அரசு 35 சதவீதம் மானியம் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கும். உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடும் சுய உதவி குழுவினர்ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும்.

தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பயன்பெறலாம். திட்டம் தொடர்பான மேலும் விவரங்களை கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகி அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X