மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தி) அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது.
இதில் பொதுமக்களிடம்இருந்து சொத்து வரி பெயர் மாற்றம், புதிய குடிநீர் குழாய், பாதாளச் சாக்கடை இணைப்பு, சொத்து வரி திருத்தம், ஆக்கிரமிப்பு, புதிய வரிவிதிப்பு உட்பட 78 மனுக்களை மேயர் பெற்றார். இவற்றின் மீது உடனே நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
துணைமேயர் நாகராஜன், துணை கமிஷனர்முஜிபூர் ரஹ்மான், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, உதவி கமிஷனர் மனோகரன், செயற்பொறியாளர் அலாவுதீன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், பொறியாளர்கள், அலுவலர்கள், கவுன்சிலர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.