யோகாவுக்காக நடை பயணம் | மதுரை செய்திகள் | Dinamalar
யோகாவுக்காக நடை பயணம்
Added : டிச 07, 2022 | |
Advertisement
 
 யோகாவுக்காக நடை பயணம்



மேலுார் : கர்நாடகா மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணா 29, யோகா ஆசிரியர். பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ யோகாவை கற்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் மைசூருவில் இருந்து அக்.,16ல் நடைபயணத்தை துவங்கினார்.

51வது நாளான நேற்று மேலுாருக்கு வந்தார். அவரை பா.ஜ., நகர் தலைவர் சேவுகமூர்த்தி தலைமையில் வரவேற்றனர். பின்னர் பள்ளிகளில் இலவசமாக மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.

அவர் கூறியதாவது: இந்தியா முழுவதும் 15 ஆயிரம் கி.மீ., துாரத்தை 3 ஆண்டுகள் நடைபயணமாக சென்று பொதுமக்களிடையை விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். செல்லும் வழியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதோடு மரக்கன்றுகளை நட வலியுறுத்துகிறேன், என்றார்.

பின்னர் தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X