கண்காணியுங்க g 100 நாள் வேலை திட்ட குளறுபடிகளை g வேலை செய்யாமலே பணம் பட்டுவாடா | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
கண்காணியுங்க g 100 நாள் வேலை திட்ட குளறுபடிகளை g வேலை செய்யாமலே பணம் பட்டுவாடா
Added : டிச 07, 2022 | |
Advertisement
 
 கண்காணியுங்க g  100 நாள்  வேலை திட்ட    குளறுபடிகளை  g  வேலை செய்யாமலே     பணம் பட்டுவாடா



மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் பயனாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.281 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாரம் தோறும் வங்கிகளில் இதற்கான பணம் செலுத்தப்படுகிறது.

பல இடங்களில் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் நபர்கள் வேலை செய்யாமல் பணம் பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது.

இத்திட்டத்தில் முறைப்படி கண்காணிப்பு இல்லாததால் அரசு பணம் வீணாகி வருகிறது.

இதில் கோடிக்கணக்கான அரசு பணம் வீணாவதை தவிர்க்க முறையான அரசு மேலாண்மை கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள் இத்திட்டத்திற்கு நியமிக்கப்பட வேண்டும். இதனால் வீணாகி வரும் பல கோடி ரூபாய் அரசு பணம் முறைப்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் ஒதுக்கப்படும் பணிகளும் முறைப்படுத்தப்படும். இதோடு இவர்களால் ஒன்றிய அலுவலக அலுவலர்களின் பணி சுமை குறைக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய பணிகளில் கவனம் செலுத்த ஏதுவாகும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X