சென்னிமலை, டிச. 7-
திருக்கார்த்திகை விழாவையொட்டி, சென்னிமலை முருகன் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபி ேஷகம் மற்றும் மஹாதீபாராதனை நடந்தது. இதில், நேற்று மாலை, 5:00 மணிக்கு முருகப்பெருமான் வெள்ளிமயில் வாகனத்தில் கோவில் உலா நடந்தது. தொடர்ந்து, 6:20 மணிக்கு சென்னிமலை முருகன் கோவில் ராஜ
கோபுரம் முன் உள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதன் பின், 60 திருப்படிகளில் விளக்கேற்றி, குத்துவிளக்கு பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு முருகப்பெருமான் மூலவருக்கு அபிேஷகம், மஹா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை டவுன் கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டு, கூத்தப்பனை கொளுத்தப்பட்டது; முருங்கத்தொழுவு பிரலிங்கேஸ்வரர் கோவிலிலும், தீபம் ஏற்றப்பட்டு கூத்தப்பனை கொளுத்தப்பட்டது.