மயிலாடுதுறை அருகே நாள்தோறும் பல மணி நேரம் மூடப்படும் கேட்டால் சிரமத்திற்கு உள்ளான மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை வழியே தினமும் 21 பயணிகள் ரயில்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. மயிலாடுதுறை- திருவாரூர் மார்க்கத்தில் இணைப்பு பாதை இல்லாத காரணத்தால் ஒன்று மற்றும் இரண்டாவது நடைமேடைக்கு மட்டுமே திருவாரூர் மார்க்கத்தில் இருந்து ரயில்கள் வரும். திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை வந்து பிறகு விழுப்புரம் அல்லது திருச்சி செல்லும் ரயில்கள் சென்டிங் என்ற பெயரில் இன்ஜின் மாற்றுவதற்கும் ரயில் பெட்டிகளை மூன்றாவது மற்றும் நான்காவது நடைமேடைகளுக்கு எடுத்துச் செல்லவும் தினமும் ஏழு முறை பாதை மாற்றும் பணி நடைபெறுகிறது. இதற்காக மாப்படுகை என்ற இடத்தில் ரயில்வே கேட் பலமுறை மூடப்படுகிறது. மாப்படுகை ரயில்வே கேட் மயிலாடுதுறை- கும்பகோணம் செல்லும் கல்லணை வழி சாலையின் முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. இங்கு காலை 8 மணி முதல் 11 மணி வரை பத்துக்கும் மேற்பட்ட முறைகள் ரயில்வே கேட் மூடப்படுவதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. குறைந்தபட்சம் சென்டிங் செய்யும் ரயில் பாதை மாற்றும் பணியை உடனுக்குடன் செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று (டிச., 07) திருவாரூரில் இருந்து வந்த ரயில் பாதை மாற்றும் பணிக்காக இன்று காலை ரயில்வே கேட்டை கடந்த போது அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் ரயில் திரும்பிச் செல்லும்போது தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் மீண்டும் ரயில்வே நிலையத்திற்கு செல்ல முடியாதபடி நடு வழியிலேயே நின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ரயில்வே நிலையம் மேலாளர் சங்கர் குரு மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த ரயில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
பரவாயில்லை கிராம மக்கள் ரயில் நிச்சயம் வரும் மென்று தெரிந்து தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணா செய்கிறார்கள் இஙகு ஒரு தலை ரயில் நிச்சயம் வராது என்று கேட்டு உறுதி செய்த பிரகு தலையைரயில் தண்டவாலத்தின் மேல் மறியல் என்று ஒரு டிராமா வை அரங்கே ஆற்றி முட்டு கொடுத்து வீர விசனம் பேசி மக்க்களய் நீங்கள் மடையார்கள் என்று மெய்ப்பித்து காட்டி புளகாகிதம் அடைந்து மகிழ்ந்தார் .
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.